Connect with us

Raj News Tamil

11 வது முறையாக பாதுகாப்பு ஊழியரை பதம் பாத்த ஜோ பைடனின் ஜெர்மன் ஷெபர்ட்!

உலகம்

11 வது முறையாக பாதுகாப்பு ஊழியரை பதம் பாத்த ஜோ பைடனின் ஜெர்மன் ஷெபர்ட்!

அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சோ்த்து பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு இன வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

இதனைத்தொடா்ந்து ,வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இந்நிலையில் 11-வது முறையாக நேற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியரை கடித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top