பாலியல் புகார் – நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது!

தமிழில், நடிகர் விஜய், தனுஷ், ரஜினி ஆகியோரின் படங்களிலும், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும், நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக, தேசிய விருதையும் இவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இவரது நடன குழுவில் உள்ள 21 வயது கொண்ட பெண் ஒருவர், காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தன்னை பாலியல் ரீதியிலான வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறியிருந்தார்.

மேலும், மைனராக இருந்தபோதில் இருந்து, அவர் தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து வந்தார் என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், ஜானி மாஸ்டரை தேடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த ஜானி மாஸ்டர், தலைமறைவாக இருந்த நிலையில், இன்று காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையிலிருந்து ஜானி மாஸ்டர் இடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News