Connect with us

Raj News Tamil

தொடங்கிய ஜூடோ போட்டி! வெற்றி பெற்றால் தேசிய அளவில் வாய்ப்பு!

தமிழகம்

தொடங்கிய ஜூடோ போட்டி! வெற்றி பெற்றால் தேசிய அளவில் வாய்ப்பு!

திருப்பூரில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ போட்டி,போட்டியில் வெற்றி பெறக் கூடியவர்கள் தேசிய அளவில் கலந்து கொள்வார்கள்,

திருப்பூரில் தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான ஜூடோ போட்டி திருப்பூர் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் ஜூடோ அசோசியேஷன் தலைவர்.
வழக்கறிஞர், சபரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் பெடரேஷன் துணை தலைவர். வழக்கறிஞர் பழனிச்சாமி போட்டியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டி 23 பிரிவின் கீழ் நடைபெறுகிறது.

மேலும் இந்த போட்டியில் தமிழக முழுவதும் இருந்தும் 530 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறக்கூடிய வீரர் வீராங்கனைகள் தேசிய அளவில் வரும் டிசம்பர் மாதம் தலைநகரான டெல்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top