தமிழகம்
100 அடி கிணற்றில் குதித்து தற்கொலை! உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!
பூதிப்புரம் அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி போஸ் என்பவருக்கு முருகேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணி முருகேஸ்வரிக்கு அண்மையில் வளைகாப்பு நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் , அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் முருகேஸ்வரி திடீரென தனது தாயுடன் கோபித்துக் கொண்டு 100 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி முருகேஸ்வரியை தேடும் பணியில் ஈடுபட்டனர், அதிகளவு தண்ணீர் இருந்ததால் மீட்பு பணி தாமதமானநிலையில்,மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் போராடி முருகேஸ்வரியை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலம் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையின் காரணமாகவே முருகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.