தமிழகம்
எனது சமாதியில் இதை எழுதினால் போதும்..! அமைச்சர் துரை முருகன் உருக்கம்
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரையில் கட்சியில் நீண்ட நெடுங்காலம் இருந்தவன், இன்னும் இருக்கபோகிறவன், என்றைக்காவது ஒருநாள் மறையப்போகிறவன். நான் மறைந்துவிட்ட அன்று என்னுடைய சமாதியில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதினால் போதும் என கலங்கிய படி பேசினார்.
துரை முருகன் பேசிக்கொண்டிருந்த போது இடையே குறுக்கிட்ட சபாநாயகர் ‘இன்னும் நூறாண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்’ என்றார். அதற்கு ‘நிச்சயமாக’ என துரைமுருகன் கூறினார்.
You must be logged in to post a comment Login