Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கள்ளச்சாராய மரணம்: ஜூன் 24-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்!

தமிழகம்

கள்ளச்சாராய மரணம்: ஜூன் 24-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24-ம் தேதி மாலை 3 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top