தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி, நீலம் நிறுவனம் மூலம், படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், இவர் கல்லிப் பாலில் ஒரு டீ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய 4 பெண்கள் தான், இப்படத்தை இயக்க உள்ளனர்.
படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.