Connect with us

Raj News Tamil

“ராஜமௌலி இப்படி ஒரு தவறை செஞ்சிட்டாரு” – கங்கனா ரணாவத்தின் பதில்!

சினிமா

“ராஜமௌலி இப்படி ஒரு தவறை செஞ்சிட்டாரு” – கங்கனா ரணாவத்தின் பதில்!

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்த சென்ற இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தை பார்த்துவிட்டு, அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனே வியந்துவிட்டார் என்றால் பாருங்களேன்.. அந்த அளவிற்கு, உள்ளூர் சினிமாவை உலக அளவில் எடுத்த சென்ற இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், பேசிய அவர், “நான் என்னுடைய படங்களில், என் தனிப்பட்ட கருத்தை திணிக்க மாட்டேன்.. சினிமா வணிக ரீதியிலானது.. மக்கள் விரும்புகிறார்கள்.. அதற்காக அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.. மற்றப்படி, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. மதம் என்பது சுரண்டல் தன்மை உடையது” என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ராஜமௌலியை விமர்சித்து, தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவருக்கு ஆதரவு தெரிவித்து, நடிகை கங்கனா ரணாவத், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த நாட்டினை காதலிக்கிறார். அவர் இந்த நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்துள்ளார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கலாம்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா.” என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top