கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த நபர், பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணுக்கும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த 21 வயதான இளம்பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான கனவை, தனது கணவர் சிதைத்து விட்டதாகவும், சிறுசிறு விஷயங்களுக்கு கூட அவர் கோபப்படுவதாகவும், தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் விட, ஓராண்டுகளுக்கு மேல் தன்னிடம் உடலுறவு கொள்ள கணவர் மறுக்கிறார் என்றும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். இளம்பெண்ணின் இந்த புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.