Connect with us

Raj News Tamil

இயக்குநா் அமீா் குறித்து பேசிய காா்த்தி!

சினிமா

இயக்குநா் அமீா் குறித்து பேசிய காா்த்தி!

ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் கார்த்தியின் முதல் பட இயக்குநா் அமீா் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பருத்திவீரன் ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது கார்த்தி இயக்குனர் அமீரை நினைவுகூர்ந்து பேசினார். அதில் “நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் அமீர் அண்ணாதான்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top