Connect with us

Raj News Tamil

கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது: ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது: ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (மே.4) தொடங்கி வரும் 28 தேதி முடிகிறது.

பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டும் ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டியுள்ளது. ஆகையால் கத்திரி வெயில் தாக்கம் இன்னும் கூடுமோ என்று பொதுமக்களும் அச்சம் ஏற்படுகிறது.

கோடைமழைக்கும் வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை (மே 4-9) வரை காற்றுக் குவிதல் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7-ஆம் தேதி கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top