தமிழகம்
கழிவறை சென்ற காதலி.. உள்ளே சென்ற காதலன்.. அரைகுறை ஆடையுடன் சிக்கிய ஜோடி..
கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு, பைக்கில் வந்துள்ளனர்.
திடீரென பைக்கில் பயணம் செய்த இளம்பெண், இயற்கை உபாதைக்கு, அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு சென்று, அங்கிருந்த கழிவறையை பயன்படுத்தியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணின் காதலன், கழிவறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்துள்ளார். திடீரென கழிவறையின் உள்ளே சென்ற பெண், காதலனுக்கு சிக்னல் காட்டி, உள்ளே வரச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து, உள்ளே சென்ற காதலன், நீண்ட நேரமாகியும், வெளியே வரவில்லை. இதனால் விபரீதத்தை உணர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், கழிவறையின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர்.
30 நிமிடங்களுக்கு பிறகு, அரைகுறை ஆடையுடன், காதலர்கள் இருவரும், வெளியே வந்துள்ளனர். இதையடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனால், அச்சம் அடைந்த காதல் ஜோடி, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, நைசாக ஓட்டம் பிடித்துவிட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த பைக்கை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)