இந்தியா
நடுரோட்டில் பாக்ஸிங் செய்த இரண்டு பேர்.. கைது செய்த போலீஸ்..
கேரளாவில் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட இரண்டு பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள உண்டு நகரத்தை சேர்ந்தவர் ரம்சாத். இவரும், ரஷீத் என்பவரும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலை ஒன்றில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனை தடுக்க வந்த மற்றொரு நபர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது.
இந்த வீடியோ காவல்துறையின் கவனத்திற்கு சென்றதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி, அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
You must be logged in to post a comment Login