நடிகர் கிச்சா சுதீப்பின் தாய் காலமானார்!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கிச்சா சுதீப். நான் ஈ என்ற படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர், புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரது தாயான சரோஜா சஞ்சீவ், உடல்நலக் குறைவு காரணமாக, பல நாட்களாக, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி, நேற்று அவர் காலமானார்.

86 வயதாகும் அவருக்கு, திரையுலகை சேர்ந்தவர்களும், அம்மாநில அரசியல தலைவர்களும், வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், கிச்சா சுதீப் தாயின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News