Connect with us

Raj News Tamil

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – அமைச்சர் சொன்ன தகவல்

தமிழகம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – அமைச்சர் சொன்ன தகவல்

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். அவருடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, கலெக்டர் ராகுல்நாத் எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு : இந்த பேருந்து நிலையத்தில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாகவும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top