Connect with us

Raj News Tamil

வீழ்ந்தது கொல்கத்தா: சென்னை அணி அபார வெற்றி!

விளையாட்டு

வீழ்ந்தது கொல்கத்தா: சென்னை அணி அபார வெற்றி!

சென்னையில் நடந்த சி.எஸ்.கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிஎஸ்கே அணி அபார வெற்றிபெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 22 லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மொத்தம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 137 ரன்கள் குவித்தது.

அதன்பின், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திராவும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நாட் அவுட் பேட்ஸ்மேனாக செயல்பட்டு, 58 பந்துகளில் 9 பவுண்டரிகளை விளாசி, 67 ரன்கள் எடுத்தார். சிவம் துபே விக்கெட்க்கு பின் களம் இறங்கிய தோனி, ஒரு ரன் மட்டும் அடித்திருந்தார்.

இறுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில், 14 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top