Connect with us

Raj News Tamil

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டிஐஜி..!!

தமிழகம்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டிஐஜி..!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் முதல் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஜயகுமார் தற்கொலை செய்திருக்கலாம் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

டிஐஜி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

More in தமிழகம்

To Top