சூழல் வந்தால் அரசியலுக்கு வருவேன் – லெஜண்ட் சரவணன்

சரவணா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன், லெஜண்ட் என்ற படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு, துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம், ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரவணன், இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கும் என்று நம்புவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனது அரசியல் பயணம் குறித்தும் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, எனக்கு மக்கள் நலனில் அதிக அக்கறை உண்டு என்றும், சரியான சூழல் வந்தால், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில், கடும் போட்டி நிலவும் என்று கூறிய இவர், என்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News