Connect with us

Raj News Tamil

கோவை வனப்பகுதி அருகே சிறுத்தை குட்டி உயிரிழப்பு !

தமிழகம்

கோவை வனப்பகுதி அருகே சிறுத்தை குட்டி உயிரிழப்பு !

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், அட்டமலை சரக பகுதியில் நேற்று மாலை, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது காப்புகாட்டில் இருந்து 30 மீட்டர் தொலையில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது கண்டறியபட்டது. பின்னர் இது குறித்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், வன கால்நடை மருத்துவர், மட்டத்துகாடு கிராம வனக்குழு தலைவர் மற்றும் வன பணியாளர்கள் இன்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அந்த பெண் சிறுத்தைக்கு மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு காயப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாகவும், மோதல் காரணமாக உயிரிழந்திருக்க கூடும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top