Connect with us

Raj News Tamil

மன்னராட்சி போல, திமுக கட்சியினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர்: எடப்பாடி கே.பழனிசாமி!

தமிழகம்

மன்னராட்சி போல, திமுக கட்சியினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர்: எடப்பாடி கே.பழனிசாமி!

மன்னராட்சி முறையைப் போல, திமுக கட்சியினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி அடுத்த குண்டலப்பட்டியில் ஸ்ரீரங்கநாதன் ரஞ்சிதம் திருமண மண்டபத்தில் தருமபுரி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் இல்லத் திருமணம் மற்றும் 100 இணையருக்கு இலவச திருமணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நடத்தி வைத்தார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவின்போது அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் உருகும் வெல்லத்தை கொடுத்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு என்ற பெயரில் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்களின் உரிமைக்காக நேர்மையாக போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்ட வழக்கு போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வதென தெரியாமல் அக்கட்சி தலைமை தவிக்கிறது என கூறியிருந்தார். இவையெல்லாம், திமுக ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

மன்னராட்சி முறையைப் போல, திமுக கட்சியினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின். தற்போது ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். ஒருபோதும் இது நடக்காது. திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும், என்று அவர் பேசினார்.

More in தமிழகம்

To Top