இந்தியா
கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட மதுபானம் – பக்தர்களிடையே தள்ளுமுள்ளு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் – பதேகர் சாலையில் உள்ள போமா கிராமத்தில், பாபா ரோட்ஷாவின் (Baba Rode Shah) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற விழாவில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையொட்டி ஏற்பட்ட கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவிலில் இந்த வழிபாட்டு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment Login