மக்களவை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.200கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.