சினிமா
பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வசூலை குவித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது 7 படங்கள் அவர் கைவசம் வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, தி ரோடு படங்கள் ஏற்கனவே முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், அஜித் நடிக்கும் ‘விடா முயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இது தவிர தனுஷின் 50-வது படம், கவுரவ் நாராயணன் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.
You must be logged in to post a comment Login