Connect with us

Raj News Tamil

முகநூல் மூலம் பிரியும் உயிர்கள்! கடிதத்துடன் கயிறில் தொங்கிய காதலி!

இந்தியா

முகநூல் மூலம் பிரியும் உயிர்கள்! கடிதத்துடன் கயிறில் தொங்கிய காதலி!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ(25). எம்சிஏ படித்து விட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாடலிங் செய்வதில் ஆர்வமுள்ள வித்யாஸ்ரீ, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் , இரண்டு ஆண்டுகளுக்கான முன்னராகவே ஜிம் பயிற்சியாளரான அக்சயுடன் முகநூல் மூலம் நட்பு உண்டாகி டேட்டிங்கில் முடிந்ததாக தெரியவருகிறது.

இதனைத்தொடர்ந்து , வித்யாஸ்ரீ ஜூலை 21-ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது. அதில், தன் மரணத்திற்கு தனது காதலன் அக்சய் தான் காரணம் என்று எழுதியுள்ளார்.

வித்யாஸ்ரீயிடம் அக்சய் 1.76 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தைத் திருப்பி தர மறுத்துள்ளார். இந்தப் பணத்தைக் கேட்ட வித்யாஸ்ரீயையும், அவரது குடும்பத்தினரையும் அக்சய் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின் வித்யாஸ்ரீயை அக்சய் புறக்கணித்துள்ளார்.

இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த வித்யாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து அக்ஷய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்,தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top