சினிமா
மாஸ்டர் பட நடிகர்களை நினைத்து வருந்திய லோகேஷ் கனகராஜ்…என்ன காரணம்??
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என மெகாஹிட் படங்களை இயக்கினார். தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் இயக்கும் படங்களில் சிறு கதாபாத்திரத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களின் மனதில் அக்கதாபாத்திரத்தை ஆழமாக பதியச்செய்வார். அப்படிப்பட்ட லோகேஷ் மாஸ்டர் படத்தில் சாந்தனு மற்றும் ஆண்ட்ரியாவை சரியாக தான் பயன்படுத்தவில்லை என லோகேஷ் நினைத்து வருந்தியுள்ளாராம். இதனை சாந்தனு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் அனைவர்க்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தேன், ஆனால் உங்கள் இருவருக்கும் சரியாக கதாபாத்திரத்தை கொடுக்க தவறிவிட்டேன் என லோகேஷ் வருத்தப்பட்டதாக ஷாந்தனு கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login