Connect with us

Raj News Tamil

காதல் தோல்வி: கல்லூரி வளாகத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்!

தமிழகம்

காதல் தோல்வி: கல்லூரி வளாகத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்!

அரியலூர் நகரில் உள்ள சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் ரகுவரன் இவர் லாரி ஓட்டுனர் ஆவார். இவரும்‌ அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியும்‌ 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவிக்கு கடந்த 19 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இன்று கல்லூரிக்கு வந்துள்ளார்.

அப்போது கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகுவரன் பிளேடால் கழுத்தில் இரண்டு இடங்களிலும், கையில் 5 இடங்களிலும் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து மாணவர்கள் போலீசாருக்கு தகவல் தர அரியலூர் போலீசார் சம்பவயிடத்திற்க்கு சென்று வாலிபரை மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top