இந்தியா
இளம்பெண் அந்தரங்க உறுப்பில் மிளகாய் வைத்த காதலன்! மோசமான செயல்! இதுதான் காரணமா?
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வசித்து வந்தவர் நிகுஞ்ச் குமார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நிகுஞ்ச் குமாருக்கு, ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதை, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது காதலி கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து கேட்ட அவர், நிகுஞ்ச் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவருடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். இதனால், கடும் கடுப்பான அவர், தனது காதலியை கடத்தி சென்றுள்ளார். மேலும், அவரை அடித்து துன்புறுத்திய அவர், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில், மிளகாயை வைத்துள்ளார். இதனை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்த அவர், சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த தப்பி வந்த அந்த இளம்பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நிகுஞ்ச் குமாரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login