சினிமா
மாநாடு இரண்டாம் பாகமா? வெங்கட் பிரபு ட்வீட்!
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு.
இந்த திரைப்படம், நேற்றைய தினத்தோடு, வெளியாகி, இரண்டு வருடங்கள் ஆகியுள்ளது. இதுதொடர்பாக, நடிகர் சிம்பு தனது மகிழ்ச்சியை, இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு ரீ-ட்வீட் செய்திருந்த வெங்கட் பிரபு, லூப் தொடர்ச்சியாகிறது என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள், மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருசிலர், தளபதி 68 படத்தின் கதையும், லூப் கதையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)