சினிமா
ரஜினியால் பின்வாங்கிய சிவகார்த்திகேயன்? பயமா? பக்தியா?
மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வீன். இவர், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்டு 11-ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஜெயிலர் படத்தின், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அந்த படம் வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாம். ஜெயிலர் படமும், மாவீரன் படமும் ஒரே வாரத்தில் வெளியாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் இடையே போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், இரண்டு படங்களின் வசூலும், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். அதாவது, மாவீரன் படத்தை ஜூலை மாதமே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீதான பயத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது அவரது தீவிர ரசிகன் என்ற பக்தியின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவா? என்று கேள்வி எழுந்துள்ளது.
You must be logged in to post a comment Login