சினிமா
வழுக்கை தலையுடன் நடிக்கும் மாதவன்! ஏன் இந்த முடிவு?
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை, நடிகர் மாதவன் திரைப்படமாக எடுத்திருந்தார். ராக்கெட்டரி என்ற பெயரில் உருவான இந்த திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், நடிகர் மாதவன் அடுத்ததாக, இன்னொரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளாராம். அதாவது, தமிழகத்தின் அறிவியல் மாமேதையான ஜி.டி.நாயுடு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை, அவர் நடித்து, இயக்க உள்ளார். விவசாயம், ஊர்தி தொழில், மின்சாரவியல் என்று பல துறைகளில், பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதால், வழுக்கை தலையுடன் மாதவன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய நடிகராக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால், வழுக்கை தலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மாதவன் நடிக்க இருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login