Connect with us

Raj News Tamil

தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியின் வீடு இடிப்பு

இந்தியா

தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியின் வீடு இடிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை பழங்குடியின ஒப்பந்தத் தொழிலாளி மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கக்கோரி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியதாக பிரவேஷ் சுக்லாவின் வீட்டை, மாவட்ட நிர்வாகம் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியது.

More in இந்தியா

To Top