“பியூட்டி பார்லர் போகணும்” – மறுப்பு சொன்ன கணவன்! தற்கொலை செய்த மனைவி!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் பல்ராம். இவருக்கு ரீனா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில தினங்களாக, தம்பதியினருக்கு இடையே, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்று ரீனா கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த பல்ராம், வீட்டிலேயே மேக்கப் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், கோபம் அடைந்த ரீனா, படுக்கை அறையின் உள்ளே சென்று, கதவை பூட்டிக் கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த கணவர், கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, ரீனா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பியூட்டி பார்லர் செல்ல அனுமதிக்காததால், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News