Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

தனிஒருவன் கதை முதலில் இந்த ஹீரோவுக்கு எழுதப்பட்டதா?

சினிமா

தனிஒருவன் கதை முதலில் இந்த ஹீரோவுக்கு எழுதப்பட்டதா?

தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில், ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இதனால் பெருமளவில் விமர்சிக்கப்பட்ட இவர், முதன்முறையாக தனிஒருவன் என்ற படத்தை, எழுதி இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில், இயக்குநர் மோகன் ராஜா இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனிஒருவன் படத்தின் கதை, முதலில் தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் தான் கூறப்பட்டது என்றும், ஆனால், காதல் சம்பந்தப்பட்ட கதையில் நடிப்பதற்கு அவர் ஆர்வம் காட்டியதால், அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், மோகன் ராஜா கூறினார்.

அதன்பிறகு தான், நடிகர் ஜெயம்ரவி இந்த படத்தில் நடித்ததாகவும், அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top