சினிமா
VTV-ல் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோவா? நம்ப முடியல!
கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு, த்ரிஷா நடிப்பில், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில், முதலில் மாஸ் ஹீரோ ஒருவர் தான் நடிக்க இருந்தாராம்.
அதாவது, இந்த கதையை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் தான் கௌதம் மேனன் முதலில் கூறியுள்ளார். கதை நன்றாக இருக்கிறது. ஆனால், மாஸ் காட்சிகள் இல்லை என்று கூறி அவர் நிராகரித்துள்ளார்.
அதன்பிறகு, அல்லு அர்ஜுணிடம் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. அவரும் மாஸ் காட்சிகள் இல்லை என்று கூறி நிராகரித்துள்ளார். அதன்பிறகு, சிம்பு நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் பல்வேறு இளைஞர்களின் Favourite காதல் திரைப்படங்களில் ஒன்றாக, இப்படம் இன்றும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login