இந்தியா
மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த தர்ணா போராட்டம் இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், சாலை மற்றும் வீட்டுவசதித்துறைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என அவர் குற்றம்ச்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தால் மேற்குவங்காளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login