‘பேச அனுமதிக்கவில்லை’…நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் மட்டுமே கலந்து கொண்டேன். ஆனால், கூட்டத்தில் என்னை 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தேன். என்னை பேசுவதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

RELATED ARTICLES

Recent News