பாஜக பெண் நிர்வாகிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் கைது!

பாஜக பெண் நிர்வாகிக்கு ஆபாச வீடியோ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பாஜக கிழக்கு ஒன்றிய தலைவராக இருப்பவர் கலையரசி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் உள்ளார்.

இந்த நிலையில் இவரது சமூக வலைத்தள பகுதி மற்றும் செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இவர் பிளாக் செய்த பொழுதும் இவரின் மகன் கல்லூரி படிக்கும் நபருக்கும் இதே போல தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக நிர்வாகி கலையரசி புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சபரி குமார் என்பது தெரிய வந்தது உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்து சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தார் அவரை விட்டுவிடாமல் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அப்பொழுதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்னைப்போல இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் வந்து சொல்ல அச்சப்படுகிறார்கள் நான் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டுமென்று தான் தற்பொழுது புகார் அளித்தேன். இவரை உடனடியாக விடுவிக்காமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News