Connect with us

Raj News Tamil

டேட்டிங் ஆப் மூலம் விபரீத உறவு.. மோசமாக டார்ச்சர் கொடுத்த கணவன், மனைவி.. அலறி ஓடிய இளைஞர்..

இந்தியா

டேட்டிங் ஆப் மூலம் விபரீத உறவு.. மோசமாக டார்ச்சர் கொடுத்த கணவன், மனைவி.. அலறி ஓடிய இளைஞர்..

டிஜிட்டல் யுகம் வந்த பிறகு, கைக்குட்டையில் இருந்து எலிகாப்ட்டர் வரை, அனைத்தும் ஆன்லைனிலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. பொருட்கள் மட்டுமின்றி, நண்பர்களையும், காதலர்களையும் கூட, ஆன்லைனிலேயே தேடும் நிலைக்கு நாம் தற்போது வந்துவிட்டோம்..

இது சில நேரங்களில் சரியாக அமைந்துவிட்டாலும், பல நேரங்களில், பிரச்சனைகளை தான் கொண்டு வந்துவிடுகிறது. அப்படியான பெரிய பிரச்சனையில், மும்பை ஐஐடி-யில் படித்து வரும் மாணவர் ஒருவர் சிக்கியுள்ளார்.
ஆணும் பெண்ணும் காதல் செய்வதற்காக, டேட்டிங் ஆப் இருப்பதை போல், LGBTQ வகையை சேர்ந்தவர்கள் காதல் செய்வதற்கும் டேட்டிங் ஆப் உள்ளது.

அப்படியான டேட்டிங் ஆப்களில் ஒன்று தான், Grindr. இந்த App-ல் தனக்கான துணையை தேடிய, மும்பை ஐஐடி மாணவர் ஒருவருக்கு, 40 வயதான ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், கடந்த 2 வருடங்களாக பழகி வந்த நிலையில், சமீபத்தில், அந்த ஆண், இளைஞரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதனால், அவரது வீட்டிற்கு சென்ற அந்த மாணவரை, 40 வயதான ஆண், தனது மனைவியுடன் இணைந்து, பாலியல் கொடுமை செய்துள்ளார். கயிற்றின் மூலம் அந்த மாணவரை கட்டி வைத்த நபர், தனது மனைவியின் உதவியுடன், கொடூரமான முறையில், செக்ஸ் டார்ச்சல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த இளைஞர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top