இந்தியா
ரயில் என நினைத்து விமானத்தின் கழிவறையில் பீடி புகைத்த நபர் கைது…
கடந்த செவ்வாய் கிழமை பிரவீன் குமார் என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து பெங்களூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற பிரவீன் குமார் தான் வைத்திருந்த பீடியை எடுத்து புகைத்துள்ளார்.
இதையடுத்து பெங்களூரு காவல்துறை பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தியது. நான் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வேன். அப்போதெல்லாம் கழிவறையில் பீடி குடிப்பேன். அப்படித்தான் விமானத்திலும் செய்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக கடுமையான சோதனைகள் நடைபெறும் என்ற நிலையில் பிரவீன் பீடியை எப்படி கொண்டுவந்தார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login