தமிழகம்
ஒரே அசிங்கமா போச்சு குமாரு…வண்டியை ஓட்ட தெரியாமல் உருட்டி சென்றதால் சிக்கிய திருடன்..!!
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மாசிலின். இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போயின.
இந்நிலையில் நள்ளிரவில் கொற்றிக்கோடு காவல் நிலைய போலிசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட தெரியாமல் சாலையில் உருட்டி வருவதை பார்த்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த உச்சி மாகாளி என்பதும் அவர் வாகனத்தையும் திருடி சென்றதும் அதை ஓட்ட தெரியாமல் உருட்டி சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை திருடி உருட்டி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
You must be logged in to post a comment Login