Connect with us

Raj News Tamil

பற்றி எரியும் மணிப்பூர்…100 பேர் பலி..மத்திய அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு

இந்தியா

பற்றி எரியும் மணிப்பூர்…100 பேர் பலி..மத்திய அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. இந்த மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியால் இந்த இனமோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தவித்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top