Connect with us

Raj News Tamil

சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் பரபரப்பு

தமிழகம்

சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தால் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மயிலாப்பூர் காவல்துறையினர் கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மயிலாப்பூர் காவல்துறையினர் இறந்த நபர் யார் என்பது குறித்தும், எவ்வாறு கடலில் அடித்து வரப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் மிக்ஜாங் புயல் தாக்கத்தால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் ஒருவேளை இறந்து கரை ஒதுங்கிய நபர் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top