டெலிகிராம் லிங் மூலம் பணம் திருடிய மா்ப நபா்!7 லட்சம் ஏமாந்த உதவி பேராசிாியா்!

சேலம் இரும்பாலை என்.ஜி.ஜி.ஓ. காலனியை அடுத்த சாந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவர் சேலத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினந்தோரும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை சம்பாதிக்கலாம். எனவே அதில் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும் என கூறி அதற்கான இணையதள லிங்கை அனுப்பி உள்ளார்.

அதை பதிவிறக்கம் செய்து முழு விபரங்களை பதிவிட்ட லோகநாதன் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் தொடர்ந்து 7 தவணைகளில் ரூ.7.61 லட்சம் அனுப்பியுள்ளாா். இந்த பரிவர்த்தனைகள் முடிந்ததும் மர்மநபர் பேசிய டெலிகிராம் லிங்க் செயலிழந்துவிட்டன.

இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்த பணத்தை இழந்ததால் சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News