“மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட தடை…சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘மார்க் ஆண்டனி’ வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவுகளை அமல்படுத்தாததால் செப்.12-ல் நடிகர் விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர்.

லைக்காவுக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News