தமிழகம்
3-ம் வகுப்பு சிறுமியின் காதை கிழித்த கணக்கு ஆசிரியை..!!
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 9-வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்து அழுதபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது வகுப்பில் 6-ம் வாய்ப்பாடை முறையாக சொல்லாததால் கணக்கு ஆசிரியை தன்னை அடித்து துன்புறுத்தி காதை கிழித்ததாக கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தார். அவர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்ப்பாடு சொல்லாததால் சிறுமியின் காதை கணக்கு ஆசிரியை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.