Connect with us

Raj News Tamil

தோப்புக்கரணம் போட வைத்து ராகிங் : மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு

இந்தியா

தோப்புக்கரணம் போட வைத்து ராகிங் : மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 15-ந்தேதி கல்லூரிக்கு அருகில் முதலாமாண்டு மாணவரை தோப்புக்கரணம் போடச் சொல்லி சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டதால் சிறுநீரக பாதிப்பு வந்துள்ளது. அந்த மாணவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 2-ம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top