Connect with us

Raj News Tamil

ரூ.2,900 கோடி ஈட்டிய 2 படங்கள்.. 3-வது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகிய நடிகை! யார் தெரியுமா?

சினிமா

ரூ.2,900 கோடி ஈட்டிய 2 படங்கள்.. 3-வது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகிய நடிகை! யார் தெரியுமா?

தங்களது முதல் படத்திலேயே பிரபலம் அடைந்த பல்வேறு நடிகைகள், சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால், சினிமாவில் இருந்து விலகி உள்ளனர்.

அந்த வகையில், தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த நடிகை ஒருவர், தன்னுடைய 3-வது படத்தோடு, சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் அந்த நடிகை, தன்னுடைய 16-வது வயதிலேயே, ஒரு நட்சத்திரமாக உருவெடுத்துவிட்டார்.

மேலும், இரண்டு சூப்பர் ஸ்டார்களுடனும் பணியாற்றிவிட்டார். என்னதான் இருந்தாலும், இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அவர் வேறு யாரும் அல்ல, பாலிவுட் நடிகை சைரா வாசிம் தான்.

ஆமிர் கான் நடித்த டங்கல் படத்தின் மூலம், தனது 15-வது வயதில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். கீதா போகட் கதாபாத்திரத்தின் சிறுவயது தோற்றத்தில் நடித்திருந்த இவர், பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

இந்த திரைப்படமும், விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும், பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது. இப்படம், உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இந்த டங்கல் திரைப்படம் தான், சைரா வாசிம்மை பெரிய நட்சத்திரமாக மாற்றியது.

அதுமட்டுமின்றி, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் சைரா வாசிம் பெற்றிருந்தார். இந்த படத்திற்கு பிறகு, தி சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தின் மூலம், மீண்டும் ஆமிர் கான் படத்தில் இவர் நடித்திருந்தார். மியுசிக்கல் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இப்படமும், 912 கோடி ரூபாய் வசூலித்து, மாபெரும் வெற்றி அடைந்தது.

மேலும், தவிர்க்க முடியாத சாதனைகளுக்காக, தேசிய சிறார் விருதையும் அவர் பெற்றிருந்தார். இந்த தொடர் சாதனைகளுக்கு பிறகு, தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

மற்ற இரண்டு படங்கள் வெற்றி பெற்றதைபோல் இல்லாமல், இப்படம் தோல்வி அடைந்தது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ்-க்கு முன்னரே, அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “அல்லாவிடம் சரண் அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது மற்றும் கவர்ச்சியான உலகத்தில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது.” என்று கடைசியாக, தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது, சைரா வாசிம் காஷ்மீரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top