தமிழகம்
எரி சக்தி துறையில் ரூ.1.38 லட்சத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம்..!
உலக முதலீட்டாளர் மாநாடு இன்று சென்னயைில் நந்தம்பாக்கத்தில் தொடங்கியது .இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பல நூறு கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் , பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.