Connect with us

Raj News Tamil

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – தொழிலாளர்களின் நிலை என்ன..?

இந்தியா

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – தொழிலாளர்களின் நிலை என்ன..?

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தர் காசி மற்றும் யமுனோத்திரி கோயில்களை இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பயண தூரம் 26 கிலோ மீட்டர்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று திடீரென சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளிகளில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் முடிவடைந்த பிறகு விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top