அரசியல்
ஆதாரங்கள் இல்லை….சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை..!!
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2002ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5.25 மணிக்கு நீதிபதி வசந்த லீலா தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இருவரையும் விடுதலை செய்வதாகவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த சரஸ்வதி, மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login